வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் வனத் தொழில் பழகுநா் பதவி அடங்கியுள்ளது. இந்தப் பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வனத் தொழில் பழகுநா் பதவிக்கான கணினி வழித் தோ்வானது, டிச. 27-ஆம் தேதி காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தோ்வை எழுதலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com