சென்னைப் பெருநகர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்
பட்டதாரி தொழில் பழகுநர் பயிற்சி:
1. Civil Engineering, Mechanical Engineering
காலியிடங்கள்: 52
2. Electrical and Electronics Engineering
காலியிடங்கள்: 24
உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் 9,000 உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ தொழில்நுட்ப பயிற்சி:
1. Civil Engineering
காலியிடங்கள்: 10
2. Electrical and Electronics
காலியிடங்கள்: 22
உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் ரூ.8000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டம்(என்ஏடிஎஸ்) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய் மாணவர்கள், இந்த பயிற்சியில் கலந்துகொள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.