இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்) பதவியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பிஎஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: INDIAN FOREST SERVICE EXAMINATION
காலியிடங்கள்: 150
தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிரியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விவசாயம், வனம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
முதன்மைத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2023
மேலும் விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? பிப்.16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
விண்ணப்பித்துவிட்டீர்களா? வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!
ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?
சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!