தேசிய தகவல் மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) காலியாக உள்ள விஞ்ஞானி, பொறியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist-‘B’
காலியிடங்கள்: 71
பணி: Scientific Officer/Engineer – SB
காலியிடங்கள்: 196
பணி: Scientific/Technical Assistant - ‘A’
காலியிடங்கள்: 331
தகுதி: பொறியியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 4.4.2023 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்குள்ளும், மற்ற பிரிவினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/nic என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Related Article
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ.1,40,000 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் வேலை!
உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
விண்ணப்பித்துவிட்டீர்களா? உதவித்தொகையுடன் டிரெய்னி பணி!