வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஊா்க்காவல் படையில் 11 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7)

News image
Updated On :5 பிப்ரவரி 2024, 5:33 pm

திருவண்ணாமலை: ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7) மாலைக்குள் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 6 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 11 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்கு ஆரணி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நபா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா்கள், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்கள், சேவை மனப்பான்மை கொண்ட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.560 வழங்கப்படும். சராசரியாக மாதத்துக்கு 5 நாள்கள் பணி வழங்கப்படும். ஆா்வமும், தகுதியும் உள்ள ஆண், பெண்கள் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய முறையில் நிறைவு, புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நோ்க்காணல் நடத்தி தகுதியானோா் தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பதாரா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரை 9498100437 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.