2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டு குரூப் 2-க்கு நடைபெற்று முடிந்த முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதேபோன்று, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.