ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆந்திராவில் வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் சாவு

கர்னூல் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்துக்குள்ளானது.

News image
Updated On :6 மார்ச் 2019, 12:43 pm

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தரிசனம் செய்து கர்னூல் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

15 பேர் படுகாயமடைந்தவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கர்நாடக மாநிலம் ராய்சூர் மற்றும் தெலங்கானா மாநிலம் கொத்தபல்லி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மர்தூரில் நடைபெற்ற மற்றொரு சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் கார் மோதியதில் உயிரிழந்தார். சாலையை வேகமாக கடக்க முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நின்றிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த அவருடைய மகள் படுகாயங்களுடன் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.