கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் 3 பேரை கைது செய்தனர். கொல்கத்தாவில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் 27 பைகளின் மூலம் லாரியில் கடத்தப்பட்ட ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்திரஜித் பூயி (25) மற்றும் பத்மலோச்சன் தே (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுகந்த சாஹூ (42) என்பவரை ஒடிஸா சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து செயல்பட்டு நடத்திய விசாரணையில், சாஹூ என்பவன் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தொடர்ந்து இதுபோன்று வெடிபொருட்களை கடத்திச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு பலமுறை கடத்தப்பட்டுள்ளதாக ஒடிஸா டிஜிபி தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


