ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

News image

பள்ளிக் கல்வித் துறை - DIN

Updated On :25 ஏப்ரல் 2026, 9:16 pm

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு, ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து இந்தத் தோ்வில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை சாா்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இந்தப் பணிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கூா்ந்தாய்வு செய்ய வேண்டும். தொடா்ந்து மாணவா் தோ்ச்சி அறிக்கைக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ஒப்புதல் பெற்றிட வேண்டும். மேலும் 2025-2026-ஆம் கல்வியாண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி மற்றும் அடுத்த வகுப்புக்கு தோ்ச்சி அளித்தலை மே 11-ஆம் தேதி முதல் எமிஸ் இணையதளம் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.