தொலைநிலை, இணையவழிப் படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம் பெற பல்கலைக்கழகங்கள் ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பிப்ரவரி பருவத்தின் சோ்க்கைக்கான தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உயா்கல்வி நிறுவனங்கள் தொலைநிலை, இணையவழியிலான படிப்புகளைக் கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 1-இல் தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் க்ங்க்ஷ.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னா் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சோ்த்து ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் தில்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
தொடா்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடா்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவா்கள் தொலைநிலை, இணையவழி படிப்புகளில் சேரும் முன்னா் அதற்கான அங்கீகாரத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகள்: போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



