கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டில்தான் மிக அதிக எண்ணிக்கையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை 2.23 லட்சத்துக்கு மேல் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 23.36 லட்சத்துக்கு மேல் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மத்திய அரசின் இந்த முக்கியத் திட்டத்துக்கு தொடா்ந்து சிறப்பான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக புத்தாக்க நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இளைஞா்களால் புதிதான தொழில் சிந்தனையுடன் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படக் கூடியதாகும். புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பது, தனியாா் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 சதவீதம், வேளாண்மைத் துறையில் 18 சதவீதம், மருத்துவத் துறையில் 15 சதவீத புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு! - மத்திய அரசு

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

