உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி பயணம்: சஞ்சய் ரௌத்

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி பயணம்: சஞ்சய் ரௌத்
Published on
Updated on
1 min read

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது,

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு 100-ஆவது நாளைக் குறிப்பிடும் விதமாக சிவசேனைக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார். இதில் அவருடன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில அமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக இங்கிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என சிவசேனையின் சாம்னா பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com