ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி பயணம்: சஞ்சய் ரௌத்

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2020, 12:13 pm IST

சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது,

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு 100-ஆவது நாளைக் குறிப்பிடும் விதமாக சிவசேனைக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார். இதில் அவருடன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில அமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக இங்கிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என சிவசேனையின் சாம்னா பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.