இரட்டைக் குழந்தைகளைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு வாகனம் ஓட்டியதில் இரட்டைக் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. 
இரட்டைக் குழந்தைகளைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
Published on
Updated on
1 min read

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு வாகனம் ஓட்டியதில் இரட்டைக் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. ஹவேரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். 

ஆனால், குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக உடனடியாக ஹூப்ளியில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

இந்த நிலையில், மருத்துவமனையின் பரிந்துரையின் அடிப்படையில், ஹவேரி மற்றும் தாராவட் மாவட்ட போலிஸாரின் உதவியுடன் 80 கி.மீ. தூரத்தை 50 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரட்டைக் குழந்தைகளை பத்திரமாக கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். 

இதையடுத்து நடைபெற்ற சிகிச்சையில் தற்போது இரு குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com