மதுரை ராமராயர் மண்டபத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர். தொடர்ந்து வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இருப்பிடம் சேர்கிறார்.