பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரகமும், ஜெர்மனியின் Eschborn நகரமும் இணைந்து நடத்திய இந்திரதனுஷ் விழாவை ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் இந்திய நடனம் மற்றும் இசை, இரண்டையும் அடி நாதமாக வைத்து "Wir Lieben das Leben" என்ற ஸ்லோகத்தை ("நாங்கள் வாழ்வை நேசிக்கிறோம்") பிரதானமாகக் கொண்டு இந்திரதனுஷ் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 23 மொழிகள் பேசுகின்ற பலதரப்பட்ட மக்கள், இனம், மதம் என்று வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்று பட்டு வாழ்கிறோம்" என்று குறிப்பிட்டார். படங்கள் உதவி: திரு. சந்தோஷ் பட்டா (Knowhow Photography).