பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டிய அனில் கபூர் - புகைப்படங்கள்
மும்பையில் 'பொன்னியின் செல்வன் 2' திரையிடலுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி மணிரத்னத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட்டின் சீனியர் நடிகரான அனில் கபூர்.
பாலிவுட்டின் சீனியர் நடிகரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கதையின் ஒரு பகுதியாக தன்னை சிறிய அளவில் அனுமதித்ததற்காக இயக்குநர் மணிக்கு நன்றி தெரிவித்தார்.
மும்பையில் படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு உயர்த்தியுள்ள நிலையில் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட் என்றார் கபூர்.
மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் நாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.