இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஹிமாசலப் பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு சூழ்நிலை நிலவுகிறது.
நிலச்சரிவினால் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் வீடுகள்.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை, மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக ஹிமாசலப் பிரதேசம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குலு மாவட்டத்தில் அன்னி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தது.
மழை நீடிப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு.