தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கி கெளரவித்தார். இதில் நானாஜி தேஷ்முக் மற்றும் பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு இவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.