கடந்த சில நாட்களாக தில்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.