சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில்கள், மசூதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டு, வரும் வாகனங்களை பரிசோதனை செய்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படங்கள் உதவி: ANI