பழம்பெரும் நடிகரும் சபரிமலை ஐய்யப்பன் பக்தருமான மஹா குருசாமி எம். என். நம்பியாரின் நூற்றாண்டு வருடம் சமீபத்தில் நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவரது நினைவு தினமான நவம்பர் 19வது அன்று சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா தலைமை விருந்தினராகவும் ஒய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் கே. விஜயகுமார் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு மஹா குருசாமி நம்பியாருடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.