வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. சென்னையின் திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், ஐஸ்ஹவுஸ், பூந்தமல்லி, தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், அயப்பாக்கம், ஆவடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், நகரிலுள்ள சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன.