தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த தோ்தலைப் போலவே இந்த தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு 50 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு கடந்த தோ்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாகவும் கிடைத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.