தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எராளமான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. போட்டிக்கு முன்னதாக, காளைகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழிகளை மாடுபிடி வீரர்கள் ஏற்றனர்.