நாட்டின் 71-வது குடியரசு தினம் முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து மத்திய-மாநில அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்து கொண்டார்.