லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகள் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் படைகள் திரும்பப் பெறப்படும் என சீனா உறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து படைகள் திரும்பிச் செல்லும் நேரத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இதனையடுத்து இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.