மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய. மாவட்டங்கள் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.
முதல்வர் ஸ்டாலின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
பொங்கிப் பெருகி வரும் காவிரித் தாய்.
தனது தந்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அணை திறப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, அரசு கொறடா செழியன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.