சென்னை கனமழை: தொடர்ந்து மூன்றாவது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு - புகைப்படங்கள்
கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ரமணா நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை, ரமணா நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. உடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
சென்னை, கொரட்டூர் அக்ரஹாரம் தெருவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அக்பர் ஸ்கொயர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சத்து மருந்துகளை வழங்கினார்.
சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாதன் குப்பம் குளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை, கொரட்டூர் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவ இளங்கோ சாலை, பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர்.