கோலாகலமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு - புகைப்படங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உள்பட அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்துள்ளனர். 
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
Updated on
வேத மந்திரங்கள் முழுங்க, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.
வேத மந்திரங்கள் முழுங்க, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.
தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்டோர்களிடம் ஆசி பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்டோர்களிடம் ஆசி பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
வேத மந்திரங்கள் ஓத, வாத்தியங்கள் முழங்க, பெருமை மிகு செங்கோலை பக்தியுடன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடி.
வேத மந்திரங்கள் ஓத, வாத்தியங்கள் முழங்க, பெருமை மிகு செங்கோலை பக்தியுடன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடி.
தேவாரம் பாட பூஜையுடன் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. தமிழகத்தின் ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர்.
தேவாரம் பாட பூஜையுடன் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. தமிழகத்தின் ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர்.
மங்கள இசை இசைக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குத்து விளக்கை ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மங்கள இசை இசைக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குத்து விளக்கை ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் செல்லும் பிரதமர் மோடி.
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் செல்லும் பிரதமர் மோடி.
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி.
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி.
செங்கோலை கைகளில் ஏந்தியவாறு சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார்.
செங்கோலை கைகளில் ஏந்தியவாறு சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார்.
மங்கள இசை இசைக்க செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
மங்கள இசை இசைக்க செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. அருகில் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டிடடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டிடடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை அறைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை அறைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் உறுப்பினர்கள்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் உறுப்பினர்கள்.
மக்களவை அறைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுந்து நின்று வரவேற்பு அளித்த மக்களவை உறுப்பினர்கள்.
மக்களவை அறைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுந்து நின்று வரவேற்பு அளித்த மக்களவை உறுப்பினர்கள்.
இருக்கையில் மக்களவையில் உறுப்பினர்கள்.
இருக்கையில் மக்களவையில் உறுப்பினர்கள்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  இதில் மக்களவையில் உறுப்பினர்களும் 888  பேரும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் மக்களவையில் உறுப்பினர்களும் 888 பேரும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி ரூபாய் 75 நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி ரூபாய் 75 நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com