சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் பேசுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பதவி, புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்றார். நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதே எங்கள் கொள்கை என்றார்.