தென்சென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ரங்கராஜனை ஆதரித்து ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு திறந்த ஜீப்பில் சென்று கமல்ஹாசன் வாக்குகள் சேகரித்தார். செய்வோம், செய்வோம் என்று பலர் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் செய்து காட்டுவோம். அப்படி நல்ல திட்டத்தை வகுத்து வைத்திருக்கும் எங்களுக்கு வாக்களித்தால் நாளை நமதே என்றார்.