காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் அனுசரிப்பு
காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.