மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் தனிப்பெரும்பான்மை பெரும் வகையில் பாஜக சுமாா் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வெற்றியை முன்னிட்டு நாடுமுழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.