சின்னத்திரை நடிகையைத் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் - புகைப்படங்கள்
நளனும் நந்தினியும்', 'நட்புனா என்னனு தெரியுமா', 'முருங்கைக்காய் சிப்ஸ்' போன்ற பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியை இன்று (செப்டம்பர் 09) திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வளம் பெறுபவர் ரவீந்திரன். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ், நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள் என்று சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு.
'மகாலக்ஷ்மி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்ல இருக்கும்னு சொல்லுவாங்க. அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடச்சா?' என பதிவிட்டு படங்களை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்து முடிந்த நிலையில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே திருமணமான சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மி கணவரைப் பிரிந்துவாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.