மேற்கிந்தியத் தீவுகளைப் பந்தாடிய ரோஹித் - ராகுல் கூட்டணி
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் போலார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ரோஹித் சர்மா 107 பந்துகளில் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து ராகுலும் 102 பந்துகளில் சதமடித்தார். பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ரோஹித் தொடர்ந்த அதிரடியைக் காட்டினர். ஷ்ரேயஸ் ஐயர் 59 ரன்களிலும், பந்த் 39 ரன்களிலும் வெளியேறினர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 387 ரன்களைக் குவித்தது.