புதுடில்லி, ஏப். 30- யார் மீதும் எந்த ஒரு மொழியையும் திணிப்பதை தாம் எதிர்ப்பதாக பிரதமர் இந்திரா காந்தி இன்று ஊர்ஜிதம் செய்தார்.
முன்பே இந்த உறுதி மொழியை அளித்திருப்பதாகவும், பல தடவை தாம் யார் மீதும் மொழியைத் திணிப்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று மீண்டும் உறுதி மொழியளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
டில்லி தமிழ் கல்வி சங்கத்தின் பொன் விழாக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் பேசினார். டில்லியில் 7 பள்ளிகளை இந்த ஸ்தாபனம் நடத்தி வருகிறது.
மும்மொழி திட்டத்தை சிலாகித்து அவர் பேசினார். குழந்தைகள் கூடுமானவரை பல இந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
சில சந்தர்ப்பங்களில் மொழியானது சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்டிருப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் மொழி பற்றிய காரணமாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் இதர நோக்கங்களுக்காகவும் மொழிப் பிரச்னையை பயன்படுத்திக் கொள்ளும் காரணமாகவும் மொழி சர்ச்சை ஏற்படுகிறது என்றார் பிரதமர்.
ஹிந்தியை வன்மையாகவும் ஆக்கிரோஷமாகவும், ஆதரிப்பவர்களால் எப்படி இறுதியில் ஹிந்திக்கு பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே என்றும் பிரதமர் சொன்னார்.
தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தாய் மொழி மூலமாக அல்லாது, யாரும் சரிவர கல்வி பயல முடியாது என்றார். அதனால் தான் அங்கீகரிக்கப்பட்ட 15 பிராந்திய மொழிகளுக்கும், ஆங்கிலத்துக்கும், ஆக மொத்தம் 16 மொழிகளுக்கு, ஊக்கமளிக்கப்படுகிறது என்றார் பிரதமர்.
மும்மொழி திட்டம் வகுக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் விளக்குகையில் ஒரு தேசிய தொடர்பு மொழியும், ஒரு சர்வதேசிய தொடர்பு மொழியும் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு எந்த பகுதியில் வசிப்பவர்களாய் இருந்த போதிலும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். இல்லையேல் உலகின் இதர பகுதிகளுடன் தொடர்பு இழந்தவர்களாக இருக்க வேண்டி வரும் என்றார். ...
Summary
May 1, 1976: Prime Minister Indira Gandhi Opposes Imposition of Language!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


