16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

மூக்கடைப்பு, கீழ் உதடு வீக்கம் மற்றும் சுவை இழந்த நாக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு இதுதான்!

உடல் பயன்பாட்டிற்கு வராத கொழுப்பு உடலில் இருந்தால், அந்த இடத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும்.

Published On :

அறிகுறிகள் : உடல் பயன்பாட்டிற்கு வராத கொழுப்பு உடலில் இருந்தால், அந்த இடத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும். இதனால் உள்வாங்குதல், வெளியேறுதல் தடைபடும். இதற்கு அடைப்பு என்று பொருள். இதனால் உண்டாகக் கூடிய மூக்கடைப்பு, கீழ் உதடு வீக்கம் மற்றும் சுவை இழந்த நாக்கு இந்த குறைபாடுகள் நீங்க..

மண்டலம் - தோல் மண்டலம்
காய் - கோவக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - புரட்டாசி
குணம் - தூய்மை
ராசி / லக்கினம் - கன்னி

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : கோவைக்காய் (5), கொப்பரைத் தேங்காய் (50 கிராம்), கொத்தவரங்காய் (5), இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  காலை மற்றும் மாலை என இருவேளையும் குடிக்கலாம். கோவைக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக  எடுத்துக்கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.