கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகைசுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!
/

மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல், வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு குணமாக

அதிகப்படியான உடல் சூட்டினால் சளி மஞ்சள் நிறமாக வெளியேறும். எதிர்ப்பு சக்தியே தடுமாறும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST

அறிகுறிகள் : அதிகப்படியான உடல் சூட்டினால் சளி மஞ்சள் நிறமாக வெளியேறும். எதிர்ப்பு சக்தியே தடுமாறும் அளவிற்கு சளி அதிகமாகியுள்ளது என்று பொருள். இதனால் வாயில் புண்ணும், பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு  அனைத்தையும் குணமாக்க...

மண்டலம் - நிணநீர் மண்டலம்
காய் - பீர்க்கங்காய்
பஞ்சபூதம் - நீர்
மாதம் - ஐப்பசி
குணம் - உள்முகம்

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன

தீர்வு

பீர்க்கங்காய்  தேங்காய் ஜீஸ்

ஒரு பீர்க்கங்காயை தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காயைத் துருவி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு காலை மதியம் இரவு என மூன்று வேளையும் 150 மில்லி அளவு எடுத்து வரவும்.

ஒரு வேளை உணவில் பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி நீராவியில் வேக வைத்து பின்பு அதனுடன் தேங்காயைத் துருவி பொறியலாக சாப்பிட்டு வந்தால் மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல் , வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில்  உண்டாகும் இரத்தக் கசிவு  ஆகியவற்றைக் குணப்படுத்தலாம். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.