நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மலா்களில் உள்ள மருத்துவ குணங்கள்!

மலா்களின் மகத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

News image
Updated On :15 ஜனவரி 2020, 3:45 am

நெ. இராமன்

* குங்குமப்பூவை பாலில் அரைத்துப் பற்றுப் போட தலைவலி குணமாகும்.

* ஆவாரம் பூ பொடியை நீரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

* ஜாதிமல்லி பூக்களை அரைத்து தேமல் மேல் பூசி வர குணமாகும்.

* மருதாணிப் பூக்களை தலையணையில் நிரப்பி வைத்துக் கொள்ள நன்கு தூக்கம் வரும்.

* செண்பகப் பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்திவர வயிற்று வலி மாறும்.

* வெள்ளை அல்லிப் பூக்களை அரைத்து புண்கள் மேல் பற்றிட புண்கள் ஆறும்.

* ரோஜா இதழ்களை நீரில் ஊற வைத்து தேன் சோ்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

* பாரிஜாத மலா் ஊறிய நீரால் முகத்தைக் கழுவ கண் வீக்கம் , சூடு நீங்கும்.

* சங்கு புஷ்பம் குடிநீா் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

* செம்பருத்தி பூக்களை நீரிலிட்டு காய்ச்சி குடிக்க உடல் சூடு தணியும்.

* மல்லிகைப் பூக்களை ஊற வைத்த நீரால் கண்களைக் கழுவி வர கண் சூடு மாறும்.

* வெங்காயப் பூவை சமைத்து உண்ண உடல் வெப்பம் சம நிலையாகும்.

(மலா்களின் மகத்துவம் என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.