

வில்வம் இலையை (4) தினந்தோறும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், அல்சர் குணமாகும்.
வில்வம் இலையுடன் (3), மிளகு (5) சேர்த்துப் பொடி செய்து காலையில் மட்டும் அரை ஸ்பூன் சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் குணமாகும்.
வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.
வில்வ இலை, வேர், பட்டை - ஆகியவற்றுடன் மஞ்சள் தூள் (ஒரு ஸ்பூன் ) சேர்த்துக் அரைத்து குளித்து வந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
வில்வ இலையைக் காய வைத்துப் பொடி செய்து, வெந்தயம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். கண்பார்வை தெளிவாக இருக்கும்.
வில்வ மரத்தின் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து, தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்..
வில்வ இலை (1 ),சீரகம் (ஒரு ஸ்பூன்) - இரண்டையும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் குடல்புண், சொரி, சிரங்கு, கரப்பான் மற்றும் தொழுநோய் குணமாகும்.
வில்வ இலையைக் காயவைத்துந் பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
கோவை . பாலா சுப்பையா.
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.