இன்றைய மருத்துவ சிந்தனை வெங்காயம்

வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபகட்டு நீங்கும்
இன்றைய மருத்துவ சிந்தனை வெங்காயம்
Updated on
1 min read

           
வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபகட்டு நீங்கும்

வெங்காயத்தை சாறு எடுத்து கடுகு எண்ணெய்யில் கலந்து தடவிவந்தால் மூட்டுவலி நீங்கும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் குணமாகும்.

வெங்காயத்தை விளக்கெண்ணைய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகும் மலச்சிக்கல் வராது.

இருமலுக்கு: 
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

பல்வலி, ஈறு வலி: 
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

மூளையின் சக்தி பெருகும்:
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com