புளியாரைக் கீரைச் சாற்றில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
புளியிரைக் கீரைச் சாறு எடுத்து , அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்தளிர் , மிளகு (4) , மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகி , நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப் புண் , வயிற்றுப் புண் குணமாகும்.
புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.
புளியாரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com