இன்றைய மருத்துவ சிந்தனை: முக்குளிக் கீரை

நெஞ்சு எரிச்சல் குணமாகும்
இன்றைய மருத்துவ சிந்தனை: முக்குளிக் கீரை
Updated on
1 min read

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


முக்குளிக் கீரை:

  • முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில்  சாப்பிட்டு வந்தால் இரவு நன்றாகத் தூக்கம் வரும்.
  • முக்குளிக் கீரையுடன் பூண்டு , மிளகு , ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
  • முக்குளிக் கீரையைச் சாறு எடுத்து அதனுடன் தான்றிக்காய் தோலை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • முக்குளிக் கீரை, நெருஞ்சி முள் இவை இரண்டையும் பாலில் போட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • முக்குளிக் கீரைச் சாற்றில் தென்னம்பாளை அரிசியை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.
  • முக்குளிக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால்  உடலுறவில் அதிக ஆர்வம் ஏற்படும்.
  • முக்குளிக் கீரையைச் சாறு எடுத்து  அதனுடன் நெல்லிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,  தினமும் அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும்  தீரும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com