இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கிச் சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவி வந்தால் அதிகப்படியான வியர்வை நின்றுவிடும்.
இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்து வந்தால் மூலக் கடுப்பு குணமாகும்.
இலந்தை மரப் பட்டையைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
இலந்தை மர இலைகளைச் சுத்தம் செய்து சாறு எடுத்து வழுக்கை உள்ள இடங்களில் தடவி வந்தால் முடி வளரும்.
இலந்தை மரப் பூவை சுத்தம் செய்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால் உடல் எரிச்சல் தணியும்.
இலந்தைப் பழத்தை (20 கிராம்) தினமும் சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.