இன்றைய மருத்துவ சிந்தனை அவரை

அவரைப் பிஞ்சைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து 21 நாள்களுக்குத் தொடர்ந்து
இன்றைய மருத்துவ சிந்தனை அவரை
Updated on
1 min read

அவரைப் பிஞ்சைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து 21 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான கண் நோய்களும் குணமாகும்.

அவரை இலைச் சாற்றை துணியில் நனைத்து  நெற்றியில் பற்றுப்போட்டுவந்தால் தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை குணமாகும்.

அவரை இலையை அரைத்துத் தலையில் பூசிக் குளித்து வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

அவரை இலைச் சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் தழும்புகள், கரும் புள்ளிகள் மறையும்.

அவரை இலைச் சாற்றுடன், சுண்ணாம்பு, ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் சேர்த்துக் குழைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

அவரைக்காய், மொச்சைக்கொட்டை, குடை மிளகாய் இவை மூன்றையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com