சிறுநீர் எரிச்சல் தீர சந்தனம் தூள் (1 டீஸ்பூன்) எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
முகப்பரு , படர் தாமரை குணமாக சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக உரைத்து பசையாக செய்து படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு உள்ள இடங்களில் பூசி வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.
இரத்த மூலம் குணமாக சந்தனம் தூள் (2 டீஸ்பூன்), அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிநீராக செய்து குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
சர்க்கரை குணமாக நெல்லிக்காய்ச்சாறு (15 மில்லி) சந்தனம் சுண்டைக்காய் அளவு எடுத்து விழுதாக அரைத்து நெல்லிக்காய் சாறுடன் கலந்து 48 நாளகள் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
உடல் சூடு , அழற்சி குணமாக பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு, உடல் சூடு , சிறுநீர் பாதையில் உண்டாகும் வலி , அழற்சி போன்றவை குணமாகும்.
கண்கட்டி குணமாக சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து வந்து காலையில் கழுவிவிட வேண்டும்.
5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி முற்றிலும் குணமாகும்.
காய்ச்சல் , நீர்க்கோவை நீங்க சந்தனத்தூள் (20 கிராம்) எடுத்து அதை (300 மி.லி) தண்ணீரில் போட்டு காய்ச்சி (150 மி.லி) வடிகட்டி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் (50 மில்லி ) வீதம் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு ,மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com