தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!

இரு மிளகெடுத்து,  இரண்டொரு  ஆடாதோடா  இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.

News image
Updated On :9 ஜனவரி 2019, 11:04 am IST
  • ஒரே ஒரு  மிளகு போதும்.... சுவைக்காக!
  • இரு மிளகெடுத்து,  இரண்டொரு  ஆடாதோடா  இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
  • மூன்று  மிளகெடுத்து  வெங்காயம்  சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
  • நான்கு மிளகும்,  சுக்கும் சிறிது  கலந்தால்  நெஞ்சுவலி  சொல்லாமல்  போகும்.
  • ஐந்து  மிளகும், சுக்கும், திப்பிலியும்  இணைந்தால்  கோழை ஓடியே போகும்.
  • ஆறு மிளகெடுத்து,   பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து  உண்ண,  மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
  • ஏழு மிளகைப்  பொடி செய்து, நெய்  கலந்து அன்னம் பிசைந்து  உண்டால், நல்லபசி  எடுக்கும்.
  • எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி  கூட  எட்டி நிற்கும்.
  • ஒன்பது மிளகும்,  துளசியும், ஒவ்வாமையை  துரத்தியடிக்கும்.
  • பத்து  மிளகை  வாயில்  போட்டுக்  கடித்து  மென்று  விட்டு,  பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து  உண்ணலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.