ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்து
By | Published On : 23rd December 2020 12:28 PM | Last Updated : 23rd December 2020 12:28 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் அற்புதமான இந்த சூரணத்தைப் பயன்படுத்தி பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
சர்ப்பகந்தா - 100 கிராம்
தாமரைப் பூ - 200 கிராம்
செம்பருத்தி. - 300 கிராம்
செய்முறை
முதலில் சர்ப்பகந்தா வேரை சுத்தப்படுத்தி சிறிது சிறிதாக துண்டாக்கிக் கொள்ளவும். தாமரைப் பூ மற்றும் செம்பருத்தி இதழ்களை மேற்கூறிய அளவு எடுத்து சுத்தப்படுத்தி நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு உலர்ந்த சர்ப்பகந்தா, தாமரைப் பூ மற்றும் செம்பருத்தி இதழ்களை எடுத்து ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அல்லது தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் இதயம் சார்ந்த குறைபாடுகளையும் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய பிரச்னையினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயாரித்து காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பாட்டிற்கு பிறகு தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
48 நாள்கள் தொடர்ந்து எடுங்கள். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE
FOOD CONSULTANCY CENTER
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ