சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

எம்.பி. பதவி ராஜிநாமா? யஷ்வந்த் சின்ஹா எச்சரிக்கை

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக ரவீந்திரா ராய் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எம்.பி. பதவியை

Updated On :11 மார்ச் 2013, 10:03 pm

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக ரவீந்திரா ராய் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கும், அந்த மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவுக்கும் பாஜகவில் பனிப்போர் நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் முண்டா அரசு செயல்திறனற்றது என்றும் ஊழல் அரசு என்றும் சின்ஹா விமர்சிதுள்ளார். இந்நிலையில், முண்டாவுக்கு நெருக்கமான ரவீந்திர ராயை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.

தமக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இப்பிரச்னையை எழுப்பினார். ரவீந்திர ராய் நியமனத்தை எதிர்த்து எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.