சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

போதைப் பொருள் விவகாரம்: விஜேந்தரிடம் விசாரணை

ரூ. 140 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற

Updated On :11 மார்ச் 2013, 9:59 pm

ரூ. 140 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங்கிடம் போலீஸôர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.

"வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் அனூப் சிங் கலோன் வீட்டின் அருகே, விஜேந்தரின் கார் நின்று கொண்டிருந்தது தொடர்பாக விஜேந்தரிடம் 2 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விஜேந்தரும் நானும் ஊட்டச்சத்து என நினைத்து குறைந்த அளவு போதை மருந்தை உட்கொண்டோம் என்று அவரது நண்பர் ராம் சிங் கூறியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது' என பஞ்சாப் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜேந்தரிடம் எந்த இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க போலீஸôர் மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.